பனிக்கால மூட்டு வலிக்கான பாதுகாப்பு முறை!

*மூட்டு வலிக்கான அறிகுறிகள் தென்பட்டால் டாக்டரின் ஆலோசனைப்படி மருத்துவம் செ ய்து கொள்ள வேண்டியது அவசியம். சாதாரண மூட்டு பிரச்னைகூட பனிக்காலத்தில் அதிகரிக்கும். வலிகளையும் ஏற்படுத்தும்.
அதற்கான பாதுகாப்பு முறை மூலம் பனிக்கால மூட்டு வலியை தவிர்க்க முடியும்.

*மூட்டுப் பிறழ்வு,  மூட்டு நழுவுதல் போன்ற காரணங்களால் முழங்கை, முன்கை பகுதியில் கடும் வலி ஏற்படும். திடீரென முழங்கையை நீட்டும் போதும் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. முழங்கைப்பகுதி ஒழுங்கற்றுக் காணப்படுவது மற்றும் அதிக வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே டாக்டரை அணுக வேண்டும். குளிர் காலத்தில் மணிக்கட்டு, கை விரல்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. மணிக்கட்டு,  விரல்களுக்கு அதிகம் வேலை கொடுப்பது, காயம் காரணமாக வலி ஏற்படலாம்.

*மூட்டு வலியைக் குறைக்க மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். மூட்டுகளை அழுத்தி அசைவைக் குறைக்கும் எலாஸ்டிக் கட்டு போடலாம். மூட்டுகளில் வலி இருக்கும்போது உடற்பயிற்சியை தவிர்க்கவும். ஒரே வேலையை தொடர்ந்து செய்வதை விட்டு இடையில் சிறிது ஓய்வெடுத்து பின்னர் வேலை செய்யலாம்.

*அதிக எடை தூக்குவதை தவிர்க்கவும். குளிர் காலங்களில் அதிகாலை குளிரில் வெளியில் வருவதை தவிர்க்கவும். வெளியில் வர நேர்ந்தால் மப்ளர், சாக்ஸ், ஷூ பயன்படுத்தி கால்கள், கழுத்து பகுதி கதகதப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். குளிரால் மூட்டு வலி ஏற்பட்டால் அப்பகுதியில் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். அதிக எடையை குறைப்பதும் மூட்டுவலியை நிரந்தரமாக வழியனுப்ப ஒரு வழியாகும்.

கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் எலும்பு வலிமை அடையும். குளிர் காலத்தில் மூட்டுக்கான பயிற்சிகளை செய்வதன் மூலம் வலி ஏற்படுவதை தடுக்கலாம்.

*பனிக்காலத்தில் உடலின் சூடு குறைவதால் ரத்தம் உறையும் பிரச்னை இருக்கும். இதனால் மூட்டு, குதிகால் மற்றும் முதுகுத்தண்டு ஆகியவற்றில் வலி ஏற்படும். குளிரில் காலுக்கு ரத்த ஓட்டம் குறைவதாலும் குதிகால் வலி ஏற்படும். மேலும் தோல் வறட்சியும் பனிக்காலத்தில் தொல்லைப்படுத்தும்.

*இந்தக்காலத்துக்கு நீர்ச்சத்து அதிகம் உள்ள புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய் உள் ளிட்ட காய்கறிகள் சேர்த்துக் கொள்ள லாம். தினமும் கட்டாயம் ஒரு பழம் எடுத்துக் கொள்ள வேண்டும். கால் பகு தியை கதகதப்பாக வைத்துக் கொண் டால் ரத்தம் உறைவதால் ஏற்படும் வலியைத் தடுக்கலாம்.

*அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் தாகத்தை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கச் செய்யும். இதனால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. பனிக்காலம் முடியும் வரை ஹோட்டல் உணவுக ளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நேரமும் சூடான உணவு எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவ சியம். கால்சியம் பற்றாக்குறையின் காரணமாகவும் மூட்டு வலிகள் பனிக்காலத்தில் அதிகரிக்கலாம்.

*கீரை வகை கள், பேரீச்சை, பால் மற்றும் பால் பொருட்கள், உலர் பழங்கள், கொட்டை வகைகள், மீன் மற்றும் முழு தானியங் கள் சாப்பிடுவதன் மூலம் இது போன்ற பிர ச்னைகளைத் தடுக்க முடியும் என்கி றார் உணவு ஆலோசகர் சங்கீதா.

நன்றி  : தினகரன்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!