அகல ரயில்பாதை விவகாரம் ?

ப சிதம்பரத்தை சந்திக்கின்றனர் அதிரை குழுவினர்!

நமதூர் வழியாக அகல ரயில் பாதையை நிறைவேற்ற கோறி அதிரையின் அனைத்து அமைப்புகளும் சமிப காலமாக தீவிர களப்பணியில் இறங்கி உள்ளதின் காரணமாக கடந்த சில மாதங்களில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தலைவர்கள் போன்றவர்களை சந்தித்து இந்த கோரிக்கைக்கு குரல் கொடுக்க வேண்டுமென கேட்டு கொண்டும் மனுக்கள் அளித்தும் கடிதங்கள் வாயிலாகவும் போராடி வருகின்றனர் .
இதன் அடிப்படையில் கடந்த மாதம் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் GK வாசன் அவர்களை சந்தித்து மனு அளித்தனர் பின்னர் இது விஷயமாக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்திக்க ஆவன செய்து தருமாறு கேட்டு கொண்டதன் பேரில் நாளை பசியின் சொந்த ஊரான காரைக்குடிக்கு வருகைதரும் மத்திய அமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளதாக நமது சட்டமன்ற உறுப்பினர் ரங்கராஜன் அவர்கள் மூலம் தகவல் தரப்பட்டது.
இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து சீபோல் நிறுவனர் எம் எஸ் தாஜுதீன் அவர்களும் கா மு கல்லூரி தாளாளர் அஸ்லம் அவர்களும் இன்று காரைக்குடி புறப்பட்டு செல்கின்றனர் .அதிரையில் இருந்து நல்வாழ்வு பேரவையின் சார்பில் அக்பர் ஹாஜியார் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று புறப்பட்டு ஒன்றாக நாளை மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரத்தினை சந்தித்து நம் பகுதி அகல ரயில் பாதை விவகாரத்தை துரிதபடுத்த வேண்டும் எனவும் இது தொடர்பாக உங்களின் ஒத்துழைப்பை இந்த பகுதி மக்களுக்கு வழங்கி உதவிட வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளதாக இக்குழுவினர் கூறினர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!