அன்னை கதீஜா பெண்கள் கலை-அறிவியல் கல்லூரி


அஸ்ஸலாமு அலைக்கும்,
கண்ணியமிக்க சகோதர, சகோதரிகளே,

அல்லாஹ்வின் பேரருளால்…

சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோ CMN சலீம் அவர்களின் முயற்சியால் காரைக்கால்-இராமநாதபுரம் ECR நெடுஞ்சாலையில், அதிராம்பட்டினத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்மாபட்டிணம் அருகே இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய அடிப்படையில்

அன்னை கதீஜா பெண்கள் கலை-அறிவியல் கல்லூரி


வருகிற கல்வி ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளது. 100 கல்வி ஆர்வலர்களின் முதலீட்டில் உருவாக உள்ள இக்கல்வி நிறுவனத்தில் நீங்களும் முதலீடு செய்து பங்குதாரராக ஆகலாம்.
இஸ்லாமிய அடிப்படையில் பெண் கல்வியாளர்களை உருவாக்கிட இந்தச் சிறப்புமிகு முயற்சியில் நீங்களும் கரம் கோத்து, இறைவனுடைய அருளைப் பெறலாம்.


சகோ CMN சலீம் அவர்கள் இரண்டு நாள் பயணமாக, இன்ஷா அல்லாஹ் வருகின்ற 05-02-2012  துபைய்க்கு வரவிருக்கிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டினத்தில் அமைய உள்ள 'அன்னை கதீஜா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி'யின் அறிமுகம் மற்றும் பங்கு சேர்க்கை குறித்த விபரங்கள் அறிய விரும்புவோர் சகோ CMN சலீம் அவர்களைக் கீழ்க்காணும் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

நம்முடைய கல்விமுறை இஸ்லாமிய மயமாக்கப்பட வேண்டும்; தமிழகம் முழுவதும் இஸ்லாமியப் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கப்பட  வேண்டும்; மார்க்கக் கல்வியை இறைவன் வகுத்துத்தந்த நெறிப்படி பேணி வளர்க்க வேண்டும், இறைவன் நாடினால் இந்தியாவில் நாளைய வரலாறு நம்முடையதாக மாறும். அதற்குத் தங்களுடைய ஆதரவையும் பங்களிப்பையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 
தமிழகத் தொடர்புக்கு:
துபை தொடர்புக்கு:
CMN சலீம்
இம்ரான் கரீம்
தலைவர், சமூக நீதி அறக்கட்டளை
அமீரக மக்கள் தொடர்புச் செயலாளர்
129/64 தம்புச்செட்டித் தெரு,
அமீரக சமூகநீதி அறக்கட்டளை
மண்ணடி, சென்னை -1
+971-559739408; +971-504784350
தொலைபேசி : +91-44-25225784

அலைபேசி : +91-9382155780
 
  



 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!