அகல ரயில் பாதை...

அல்ஹம்துலில்லாஹ் !
திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை விரிவாக்கம் சம்பந்தமாக தொடர் முயற்சியாக,கடந்த வாரம் மாண்புமிகு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களை காரைக்குடியில் சந்தித்தோம். அதன் விபரத்தை ஆங்கில நாளேடான THE HINDU பத்திரிக்கையில் விபரமாக எழுதி இருந்தார்கள். அதன் நகலையும் உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

மாண்புமிகு உள்துறை அமைச்சரை சந்தித்த பின்னர், சற்றும் தாமதிக்காமல் உள்துறை அமைச்சகத்திலிருந்து A.R.U.D.A அமைப்பிற்கு ஒரு கடிதமும் , ரயில்வே துறை அமைச்சருக்கு மேற்கண்ட அகல ரயில்பாதை திட்டத்தை வரும் பட்ஜெட் இணைக்கும்படியும், அது சம்பந்தமாக மேற்கொண்டு விளக்கமும்
கேட்டு கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அதன் நகல் உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
மேலும் திருவாரூர் காரைக்குடி ரயில்வே மார்க்கத்திலுள்ள வர்த்தக மற்றும் சேவை அமைப்புகளோடு இணைந்து மாண்புமிகு ரயில்வேதுறை அமைச்சரை மார்ச் 14 தேதி பட்ஜெட் முன்பாக சந்திப்பதற்காக Appointment கேட்டு எதிர்பார்த்து கொண்டிருகின்றோம். எல்லாம் நன்மையாக நடக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக !


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!