மாபெரும் கையெழுத்து இயக்கம் !!

அஸ்ஸலாமு அழைக்கும் ...
பாரம்பரியமிக்க தொடர் வண்டி வழித்தடமான திருவாரூர் -திருத்துறைப்பூண்டி - முத்துபேட்டை -அதிராம் பட்டினம் வழியாக காரைக்குடி வரை வந்து சென்று கொண்டிருந்த தொடர்வண்டி பாதையை அகல பாதையாக மாற்ற வேண்டும் என நமதூரின் பல்வேறு அமைப்புகள், வணிகர்கள் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு வகையில் போராட்ட வியுகங்களை வகுத்து நீண்ட நாட்காளாக போராடி வருகின்றனர்.

இதற்க்கு மத்திய அரசும் ரயில்வே இலாக்காவும் செவி சாய்க்காமல் இன்று வரை ஒரு சிறு துரும்பை கூட நகர்த்த வில்லை என்பதை நாம் அறிவோம் .

பாரம்பரியம் மிக்க இந்த தடத்தின் தேவையை உணர்ந்து வருகின்ற நாடாளுமன்ற கூட்ட தொடரில் தாக்கல் செய்ய இருக்கும் ரயில்வே பட்ஜெட்டில் இந்த தடத்தின் அகல ரயில் பாதைக்கு நிதியை ஒதுக்கி பணிகளை துரிதமாக ஆரம்பிக்க வேண்டி மாபெரும் கையெழுத்து இயக்கத்தை சென்னை வாழ் அதிரை மக்கள்கள் நடத்த இருக்கின்றனர்.

இந்த கையெழுத்து இயக்கத்திற்கு பொது மக்கள்/சென்னை வாழ் அதிரை வர்த்தகர்கள் பெருவாரியாக ஆதரவு வழங்கிட வேண்டுமாய் அன்போடு கேட்டுகொள்கிறோம்.

இந்த கையெழுத்து பிரதிகளை மாண்புமிகு ரயில்வே மந்திரி மேதகு தினேஷ் திருவேதி , மத்திய நிதியமைச்சர் , உள்ளாட்ச்சி துறை அமைச்சர். உள்ளிட்ட மத்திய மாநில அமைச்சர் பெருமக்கள் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர்களுக்கு அனுப்பி வைத்து நமது கோரிக்கைகளை வென்றெடுப்போம். இன்ஷா அல்லாஹ் ....

இது பற்றி மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய எண் : +91 9944426360

குறிப்பு :,
நேரிடையாகவந்து கையெழுத்து வழங்க இயலதவர்களான பெண்கள் ,முதியவர்கள் மேற்காணும் செல் நம்பரை தொடர்புகொண்டு முகவரி தெரிவித்தால் நேரில் வந்து கையெழுத்து
பெற்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எனவே சென்னையில் வசிக்கும் அதிரைவாசிகள் ஒவ்வெருவரும் இந்த படிவத்தில் கையப்பம்மிட்டு இந்த போராட்டத்தில் நீங்களும் பங்கெடுத்து கொள்ளலாமே !

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!