பெட்ரோல் விலை உயரும் : எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவிலும் பெட்ரோலின் விலை உயர்த்தப்படும் என தெரிகிறது.
பெட்ரோல் விலையை சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததாலும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளதாலும் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ. 2 வரை உயரும் என்று தகவல்கள் வெளியானது. மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடுகளில் கடும் குளிர் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து பெட்ரோல் விலை உயரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!