மின்சார கட்டணம் 1-ந்தேதி முதல் உயருகிறது: அறிவிப்பு விரைவில் வெளியாகும்

 


மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையிட்டது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மின்சார கட்டணத்தை உயர்த்தாததால் மின்வாரியம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக ஆணையத்திடம் எடுத்து கூறியது.
 
அதனால் எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம் என முடிவு செய்து மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த நவம்பர் சமர்ப்பித்தது.
 
அதைத்தொடர்ந்து ஆணையம் பொதுமக்களிடம் கருத்து கேட்டது.   சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் மின்கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டனர்.
 
இதையடுத்து மின்சார கட்டணத்தை எவ்வளவு உயர்த்தலாம், வீடுகள், தொழிற்சாலைகள், உயர் அழுத்த மின்சார பயன்பாடு, கட்டணம் எவ்வளவு அதிகரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
சிறு தொழில்கள், குடிசை தொழில்களுக்கு கட்டண உயர்வு எப்படி அமல்படுத்துவது குறித்து இறுதி செய்யப்பட்டுள்ளது. மின்சார வாரியம் கொடுத்த கட்டணத்தில் ஒருசில மாற்றங்களை ஒழுங்குமுறை ஆணையம் செய்துள்ளதும் மின்கட்டண உயர்வுக்கான அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மின் கட்டணம் உயர்வு குறித்த முறையீடு செய்து 120 நாட்களுக்குள் கட்டண உயர்வை அறிவிக்க வேண்டும். அந்த அடிப்படையில் அடுத்த வாரத்துடன் 4 மாதங்கள் முடிகிறது. எனவே அதற்கான அறிவிப்பு வெளிவரும் எனத் தெரிகிறது.
 
ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து மின்கட்டண உயர்வை நடைமுறைப்படுத்த மின்சார வாரியம் தயாராக உள்ளது. மின் கட்டணம் உயர்த்தப் படுவதால் வாரியத்தின் வருவாய் உயரும். வருவாய் உயரும் என்ற காரணத்தை காட்டித்தான் மின்வாரியம் புதிய கடன்களை வாங்கி உள்ளது.
 
நிதி நெருக்கடி தொடர் நஷ்டத்தால் சிக்கி தவிக்கும் மின்சார வாரியம் மின் கட்டண உயர்வை தள்ளி போட வழியில்லை. எப்படியும் 1-ந்தேதி அமலுக்கு வரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 
 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!