ஐக்கிய
அரபு அமீரகம் அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய மாகாணங்களில் குடியிருக்கும்
கட்டிட பால்கனியில் துவைத்த துணிகளைக் காய வைப்பதும், டிஷ் ஆண்டெனாவை
பொருத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் துபாயின் சில பகுதிகளில்
வரும் மார்ச்-1,2012 முதல் பால்கனியில் துணிகள், டிஷ் ஆண்டெனா மற்றும்
பார்பிக்யூ அடுப்பு ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
TRAKHEES எனப்படும் அரசாங்க துணை அமைப்பு கடந்த ஆறுமாதங்களாக இதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருவதாகவும் இம்மாதம் பிப்ரவரி 29 ஆம் தேதியோடு அந்த பிரச்சாரம் நிறைவடைகின்றது என்றும் தெரிவித்துள்ளது.
பால்கனியில் துவைத்த துணிகளைக் காயவைப்பதும்,சீதோசனப் பயன்பாடு தவிர்த்த ஏனைய தளவாடங்களை வைத்திருந்தால் 500 திர்ஹம்ஸ் (சுமார் 6,500 ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு துபாயில் இந்தக் கட்டுப்பாடு பாம் ஜுமைரா, ஜுமைரா லேக் டவர்ஸ், இண்டர்நேசனல் சிடி, டிஸ்கரி கார்டன் ஆகிய பகுதிகளில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.
தமிழர்களும் ஆசிய நாட்டவர்களும் பெருமளவில் தங்கியிருக்கும் டேரா துபாய், பார் துபாய் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதியான சோனாப்பூர் ஆகிய இடங்களில் பெரும்பாலான கட்டிடங்களில் துணிகளைக் காயவைக்கவும்,டிஷ் ஆண்டெனா பொருத்தவும் வீட்டின் பால்கனிகளே உபயோகிக்கப்படுகின்றன என்றாலும் மேற்கண்ட அறிவிப்பில் இப்பகுதிகள் குறிப்பிடப்படவில்லை என்பது ஆறுதலான செய்தி.
எனினும், துபாய் முனிசிபாலிடியின் கெடுபிடி மற்றும் அபராத விதிப்பிலிருந்து தப்பிக்க இவ்விசயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
நன்றி: இந்நேரம்.காம்
TRAKHEES எனப்படும் அரசாங்க துணை அமைப்பு கடந்த ஆறுமாதங்களாக இதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருவதாகவும் இம்மாதம் பிப்ரவரி 29 ஆம் தேதியோடு அந்த பிரச்சாரம் நிறைவடைகின்றது என்றும் தெரிவித்துள்ளது.
பால்கனியில் துவைத்த துணிகளைக் காயவைப்பதும்,சீதோசனப் பயன்பாடு தவிர்த்த ஏனைய தளவாடங்களை வைத்திருந்தால் 500 திர்ஹம்ஸ் (சுமார் 6,500 ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு துபாயில் இந்தக் கட்டுப்பாடு பாம் ஜுமைரா, ஜுமைரா லேக் டவர்ஸ், இண்டர்நேசனல் சிடி, டிஸ்கரி கார்டன் ஆகிய பகுதிகளில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.
தமிழர்களும் ஆசிய நாட்டவர்களும் பெருமளவில் தங்கியிருக்கும் டேரா துபாய், பார் துபாய் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதியான சோனாப்பூர் ஆகிய இடங்களில் பெரும்பாலான கட்டிடங்களில் துணிகளைக் காயவைக்கவும்,டிஷ் ஆண்டெனா பொருத்தவும் வீட்டின் பால்கனிகளே உபயோகிக்கப்படுகின்றன என்றாலும் மேற்கண்ட அறிவிப்பில் இப்பகுதிகள் குறிப்பிடப்படவில்லை என்பது ஆறுதலான செய்தி.
எனினும், துபாய் முனிசிபாலிடியின் கெடுபிடி மற்றும் அபராத விதிப்பிலிருந்து தப்பிக்க இவ்விசயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
நன்றி: இந்நேரம்.காம்
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!