தட்கல் பாஸ்போர்ட் ஒரே நாளில் கிடைக்கும்


விண்ணப்பித்த ஒரே நாளில் தட்கல் பாஸ்போர்ட் பெறும் நடைமுறை பாஸ்போர்ட் சேவா கேந்திராக்களில் அமலுக்கு வந்துள்ளது. வெளியுறவுத் துறையும்,   டிசிஎஸ் நிறுவனமும் இணைந்து பாஸ்போர்ட் விநியோகிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவா கேந்திரங்கள் துவக்கப்பட்டுள்ளன.

புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பிக்கும் பணிகள் பாஸ்போர்ட் சேவா கேந்திராக்களில் மட்டுமே மேற்கொள்ள முடியும். தற்போது இந்த முறை சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட நாடு முழுவதும் 18 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களின் (ஆர்பிஓ) கீழ் உள்ள அனைத்து பாஸ்போர்ட் சேவா கேந்திராக்களிலும் அமலுக்கு வந்துவிட்டது. புதிய முறையில் தட்கல் பாஸ்போர்ட் விண்ணப்பித்த ஒரே நாளில் கிடைக்கும். சாதாரணமுறையில் விண்ணப்பித்த 3 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும். அரசு, பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு போலீஸ் வெரிபிஷேகன் தேவையில்லை. அதற்கு பதிலாக சான்று வழங்கும் (கெஜட்டட்) அதிகாரியின் நோ அப்ஜெக்ஷன் சான்றிதழ் போதும். இவர்களது உறவினர்களுக்கும் முன் வெரிபிகேஷன் தேவையில்லை.

ஆன்லைன் வழி விண்ணப்பிக்கும்போது தவறான விபரங்களை அளித்தால் அதற்காக அபராதம் செலுத்த வேண்டும். முன்பு பாஸ்போர்ட் எடுத்திருந்து அதை மறைத்தால் ஸீ5 ஆயிரம் அபராதம். தவறான விபரம் தந்தாலும் அபராதம் செலுத்த வேண்டும். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும், புதுப்பிக்கவும் ஆன்லைன் வழியாக பதிவு செய்ய வேண்டும். மிக அருகில் உள்ள பாஸ்போர்ட் சேவா மையத்தில் நேரில் ஆஜராக வேண்டிய நாள் ஆன்லைன் வழியாக நமக்கும் கிடைக்கும். நேரில் ஆஜராகும்போது போட்டோ எடுக்கவும், விரல் அடையாளம் பதிவு செய்யவும், இதர ரேகைகள் பரிசோதனை போன்றவற்றுக்காக 45 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.





0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!