மின்சாரம் திருடுவதை பார்த்தால் சொல்லுங்கள்!!!

 மின்சாரம் திருடிய தோல் தொழிற்சாலைக்கு 1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மின்திருட்டு கண்டறியப்பட்டால் 9444018955 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
 

இதுகுறித்து அக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 

தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பறக்கும் படை அதிகாரிகள் சென்னை மின்பகிர்மான வட்டத்தில் அனகாபுத்தூர், பம்மல் துணை சரகத்தில் 3 ம் தேதியன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் தோல் பொருள் தொழிற்சாலை ஒன்றில் மின்சாரம் திருடப்பட்டு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. 6 லட்சத்து 53 ஆயிரத்து 984 என்ற அளவுக்கு அந்த நிறுவனம் மின் திருட்டு செய்திருந்தது. இதையடுத்து தொழிற்சாலை உரிமையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
 

மின் திருட்டு தொகை 6 லட்சத்து 53 ஆயிரத்து 984, அதற்கான அபராத தொகை 1 லட்சத்து 25 ஆயிரம் ஆக Ï7 லட்சத்து 78 ஆயிரத்து 984 ஐ சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் செலுத்தினர். மின் திருட்டு கண்டறியப்பட்டால் பறக்கும் படை உதவி செயற்பொறியாளரை 9444018955, 9445850452, 9445850453 என்ற எண்களில்  தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 comments:

shahul said...

muthalil minsaram varatum parkalam.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!