ஹஜ் மானியத்தில் மாற்றம் செய்தது மத்திய அரசு

 
இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் சவூதி அரேபியாவிலுள்ள மக்கா ஆலயத்துக்கு  ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இந்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மானியம் அளித்து வருகிறது.
அண்மையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, மானியம் இனி ஆயுளுக்கு ஒருமுறை மட்டுமே வழங்குவதற்கு  மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள இனி அவர்களின் ஆயுள்காலத்தில் ஒரு முறை மட்டுமே மானியம் வழங்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது

தற்போது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. இதை மாற்றி இனி ஆயுளில் ஒருமுறை மட்டுமே மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் ஹஜ் கமிட்டி சார்பாக ஹஜ்  பயணம் மேற்கொள்பவர்களுக்கு விமானச் சீட்டின் விலையில் 50 சத விலைக்குறைப்பு செய்யப்படுகிறது. இதுவே ஹஜ் மானியம் எனப்படுகிறது

 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!