மாணவர்களுக்கு அரசின் விலையில்லா லேப்டாப்

தமிழக செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஊட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஏழை, எளிய மக்கள் வாழ்க்கைத்தரம் உயரும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 1.85 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்காந்த அடுப்பு பெற தகுதியுள்ளவர்கள்.

 இதில் 2011,12 மே மாதத்திற்குள் 25 லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கி முடிக்கப்படும். தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக லேப்டாப் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனை த்து மாணவ, மாணவிகளுக்கும் கட்டாயம் லேப்டாப் வழங்கப்படும். இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!