அதிராம்பட்டினத்தில் 49.50 மி.மீ மழை பதிவு !


தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று (அக்.30) திங்கட்கிழமை பிற்பகல் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே வெள்ளம் தேங்கி காணப்படுகின்றன.


அதிராம்பட்டினத்தில் வானம் மேகக்கூட்டங்களால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. மழை அவ்வப்போது விட்டுவிட்டு பெய்து வருகிறது.

இன்று (அக்.31) செவ்வாய்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 49.50 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில்அதிகபட்சமாக கும்பகோணத்தில் 91 மி.மீ, பட்டுக்கோட்டையில் 47.40 மி.மீ, பேராவூரணியில் 14 மி.மீ, மதுக்கூரில் 55.80 மி.மீ மழை பதிவாகியது.

மழையையொட்டி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று (அக்.31) செவ்வாய்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!