அதிரை சாலைகளை இரவு நேரங்களில் ஆக்கிரமித்த மாடுகள்!!!

 தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் பேரூராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளில் இரவு நேரங்களில் மாடுகள் குறுக்கே அமர்ந்துவிடுகின்றன. இதன் காரணமாக வாகனத்தில் வருபவர்கள் சில நேரங்களில் விபத்தை சந்திக்கின்றனர்,வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

கனரக வாகனங்கள் மாடுகள் மீது மோதி உயிரிழப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன்.மேலும் இரவு நேரங்களில் சாலைகளில் நிற்கும் மாடுகளை பிடித்து அபராதம் வசூலிக்கும் அதிகாரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் இருக்கிறது.இதுபோன்ற சம்பவங்களில் நிகழாமல் இருக்க மாடு வளர்க்க கூடியவர்கள் இரவுநேரங்களில் வீடுகளிலே கட்டி பராமரிக்கவேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.நிறைவேறுமா அவர்களின் எதிர்ப்பார்ப்பு

நேற்றுமுன்தினம் அதிராம்பட்டிணம் அருகே மல்லிப்பட்டிணத்தில் மாடுகள் சாலையின் குறுக்கே நின்றது தெரியாமல் லாரி மோதி இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரழந்து,வாகனமும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!