புதிய வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு !


தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க
30-11-2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;
இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, 01-01-2018 அன்று தகுதி நாளாகக் கொண்டு கடந்த 03-10-2017 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் மீது சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2018 க்கான பணிகள் 31-10-2017 லிருந்து 30-11-2017 தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு 31-12-1999 வரை பிறந்தவர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட அருகாமையில் உள்ள வாக்குச் சாவடிகளில் அல்லது தொடர்புடைய வட்ட அலுவலகங்களில் படிவம் 6 ஐ பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் வயதிற்கான ஆதார சான்று நகல் மற்றும் இருப்பிட முகவரிக்கான ஆதார நகல் ஆகியவற்றை இணைத்து படிவம் பெற்ற இடத்திலேயே அளித்திடலாம் என அறிவிக்கப்படுகிறது.

காலக்கெடு நீட்டிப்பினைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தமுறை, 2018 பணிகள் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 30-11-2017 வரை தொடர்ந்து நடைபெறும். தேவையான படிவங்களுடன் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் பணியில் இருப்பர்,  எனவே. புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6 ஐயும் (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படிவம் 6A மூலம்), பெயர் நீக்கம் செய்திட படிவம் 7 ஐயும், பெயர், முகவரி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின் படிவம் 8 ஐயும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8A ஐயும் பூர்த்தி செய்து உரிய சான்றாவண நகல்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலரிடமே விண்ணப்பிக்கலாம். தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க, உரிய மாற்றங்கள் மேற்கொள்ள நேரடியாக உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்க இயலாதவர்கள், Online மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். 
Online மூலம் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி றாற.நடநஉவiடிளே.வn.படிஎ.in  இறுதி வாக்காளர் பட்டியல் 05-01-2018 அன்று வெளியிடப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை  தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!