அதிரையில் தொடரும் திருட்டு மற்றும் திருட்டு முயற்சி சம்பவங்கள் !!


தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவை சேர்ந்தவர் ஜமாலுதீன் (70). இவர் ஹாஜா நகர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். வழமைபோல், நேற்று வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் வெள்ளிக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளார்.


அண்மை காலமாக, அதிராம்பட்டினம் பகுதியில், நள்ளிரவில் தொடர் திருட்டில் ஈடுபடும் திருடர்களின் அட்டுழியம் அதிகரித்து வருகிறது. போலீசார் இரவில் வாகன ரோந்தில் ஈடுபட்டு திருடர்களின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!