மின்தடை உள்ளிட்ட புகார்களை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்கும் புதிய வசதி அறிமுகம்!


மின்சாரம் குறித்த புகார்களை வாட்ஸ்-அப் மூலம் தெரிவிக்கும் புதிய வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக, மாவட்டம் வாரியாக வாட்ஸ்-அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


மின்தடை, மின்கம்பம் சேதம், தெருவிளக்கு எரியாமல் இருத்தல், பில்லர் பாக்ஸ்கள் சேதம், மின்சார ஒயர்கள் அறுந்து விழுதல், மின்கேபிள்கள் சேதம் உள்ளிட்ட புகார்களை நுகர்வோர்கள் கால்சென்டர் மூலம் மின்வாரியத்துக்குத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நுகர்வோர்கள் மேற்கண்ட புகார்களை தற்போது வாட்ஸ்-அப் மூலம் தெரிவிக்கும் புதிய வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ளவர்கள் 9445850829 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்துக்கு 9444371912, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு 9445851912, திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு 9486111912, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு 9443111912, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு 9445855768, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 9442111912, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு 8903331912, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு 6380281341 என்ற வாட்ஸ்-அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட மாவட்டங்களில் வசிக்கும் மின்நுகர்வோர்கள் மின்துறை சம்பந்தமான புகார்களை தங்கள் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

நன்றி: தி இந்து தமிழ்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!