கீழத்தெரு முஹல்லா சார்பில் 7 இடங்களில் புதிதாக குப்பைத்தொட்டி வைப்பு.


தூய்மை, பொது சுகாதாரம் ஆகியவற்றை வலியுறுத்தி, அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழத்தெரு பகுதிகளில் புதிதாக குப்பைத் தொட்டிகள் 7 இடங்களில் வைக்கப்பட்டன.


தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கம் சார்பில், அதிராம்பட்டினம் ஜாவியா ரோடு, புதுக்குடி நெசவுத் தெரு, வெற்றிலைக்காரத் தெரு, கீழத்தெரு சங்கம் அருகில், காட்டுப்பள்ளி தர்ஹா அருகில், செய்னாங் குளம் அருகில்-2 ஆகிய 7 இடங்களில் புதிதாக குப்பைத் தொட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ. 40 ஆயிரம் ஆகும். இதில், கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்க நிர்வாகிகள் தாஜுதீன், சேக்தாவூது, எம். அப்துல் ஜலீல். முகமது முகைதீன், மான்.சேக், பாவா பகுருதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்க நிர்வாகிகள் கூறியது;
'அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழத்தெரு பகுதி பிரதான சாலைகளில் ஆங்காங்கே குப்பைக் கூளங்கள் சிதறிக்கிடந்தன. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது. மேலும் இப்பகுதியில் துர்நாற்றமும் வீசி வந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும், கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்க  நிர்வாகம் சார்பில், 7 இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் குப்பைகளை தொட்டியில் மட்டும் கொட்டிச்செல்ல வேண்டும். சாலைகளில் கொட்டிவிட்டு சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்த வேண்டாம்' என்றனர்.

 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!