அதிரையில் முழு வீச்சில் நடைபெறும் ரயில் நிலையம் கட்டுமானப் பணி!!!


காரைக்குடி - திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதை, ரூ. 711 கோடி செலவில், அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணிகள் தீவிராக நடைபெற்று வருகிறது. இதில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் முடிந்துள்ளதை அடுத்து. இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயிலைப் பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டம் இன்று (மார்ச்.01) வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதில், தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ மனோகரன் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

பட்டுக்கோட்டை - திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணியின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப்பணி கடந்த ஜூலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலையம், 420 மீட்டர் நீளத்தில் நடைமேடை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை கட்டிடம், டிக்கெட் கவுண்டர், பயணியர் ஓய்வு அறை என பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் ஒருங்கிணைந்த நிலையம் அமைப்பதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில், அதிராம்பட்டினம் ரயில் நிலைய மேற்கூரை அமைக்கும் பணிக்கு மொத்தம் 100 டன் எடை இரும்பு பயன்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக 50 டன் இரும்பில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய மேற்கூரை, 1 மற்றும் 2-வது பிளாட் பாரம் ஆகியவற்றை இணைக்கும்  படிக்கட்டு நடைமேடை மேற்கூரை, 2-வது பிளாட் பாரத்தில் தலா 32 மீட்டர் நீளத்தில் 4 மேற்கூரைகள், 1-வது பிளாட் பாரத்தில், தலா 32 மீட்டர் நீளத்தில் 3 மேற்கூரைகள் ஆகிய பணிக்கான வெல்டிங் பணிகள் முடிந்துள்ளது.

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், ஒரே நேரத்தில் 2 ரயில்கள் நிறுத்தும் வகையில் இரண்டு பிளாட் பாரம் அமைப்பதற்கான தடுப்பு சுவர்கள் எழுப்பட்டு வருகிறது. ரயில் நிலைய தரை தளத்திற்கும், நடை மேடை தடுப்பு சுவருக்கும் இடையே மண் நிரப்பட்டு உள்ளது.

பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம் வழியாக திருத்துறைப்பூண்டி வரையிலான சுமார் 50 கிலோ மீட்டர் ரயில் பாதையில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக, பட்டுக்கோட்டை முதல் பள்ளிக்கொண்டான் வரையிலான பாதையில் உள்ள தற்காலிகமாக பொருத்தி இருந்த பழைய தண்டவாளங்கள் அகற்றிவிட்டு, டெல்லியிலிருந்து கூட்ஸ் ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட  360 மீட்டர் நீளமுள்ள புதிய தண்டவாளங்கள் இப்பாதையில் பொருத்தப்பட்டன.

இதைதொடர்ந்து, இரண்டாம் கட்டமாக பள்ளிக்கொண்டான் முதல் அதிராம்பட்டினம் வரையிலான பாதையில், தண்டவாளங்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இப்பணிக்காக, பணிக்காக ஸ்லீப்பர் கட்டைகள் டிப்பர் லாரிகளில் கொண்டுவரப்பட்டு ஜே.சி.பி இயந்திரம் உதவியோடு ரயில் பாதையில் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஜல்லிகள் கொட்டப்பட்டு வருகிறது.

பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதைப் பணி வரும் ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதை அடுத்து, இந்த வழித்தடத்தில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!