அமீரகத்தில் இருந்து 4,700 சடலங்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப உதவிய சமூக நல ஆர்வலர் அஷ்ரப்!


துபையின் வானுயர்ந்த கட்டிடங்களுக்கு நேர்மாற்றமான நகரம் அஜ்மான். கவர்ச்சிக்கும், தூசிக்கும் உதாரணங்களாகத் திகழும் இந்த 2 நகரங்களுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 35 கி.மீ மட்டுமே. இங்கு ஒரு மெக்கானிக் ஷாப் நடத்தி வருவதுடன் மனைவி மற்றும் மகளுடன் அளவான ஒரு பெட்ரூம் வீட்டில் வாழ்ந்து வருகிறார் 44 வயதேயான அஷ்ரப் தாமாரஸேரி என்கிற சமூக நலத் தொண்டர். கேரளாவைச் சேர்ந்த இவரை தேடிவந்த பல விருதுகள் வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்கின்றன.

எப்போதும் சிணிங்கிக் கொண்டே இருக்கும் இவரது மொபைலில் அதிகமான அழைப்புக்கள் இவர் தொழில் சார்ந்ததை விட உதவிகள் கேட்டே வருகின்றன. குறிப்பாக அஜ்மான், ஷார்ஜா, துபை மற்றும் பிற எமிரேட்டுகளில் இறந்த வெளிநாட்டு உறவுகளிடமிருந்தே.

நேரகாலம் பார்க்காமல் ஓடோடிச் சென்று உதவும் இவரால் சுமார் 38 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,700 சடலங்கள் சொந்த ஊர்களுக்கு சங்கடங்கள் தீர்ந்து பறந்துள்ளன, சமீபத்தில் இறந்த நடிகை ஸ்ரீதேவி என்பவரின் உடல் உட்பட. கடைசியாக போலீஸாரின் தடையில்லா சான்றிதழைப் பெற்று அவரது உடலை அனுப்ப ஏற்பட்ட தாமதத்திற்கு இடையில் இந்தியாவின் நூற்றுக்கணக்கான மீடியாக்கள் இவரையே செய்திகளுக்கு தொடர்பு கொண்டன.

நடிகை ஸ்ரீதேவியின் உடலை அனுப்புவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த போதே வேறு 3 சடலங்களுக்குமான ஆவணங்களையும் சேர்த்தே செய்துள்ளார். ஏழையோ, பணக்காரரோ எனக்கு எல்லோரும் ஒன்றே எனக்கூறும் அஷ்ரப் பலருக்கும் இங்குள்ள சட்டங்கள் தெரியாததாலேயே தன்னுடைய உதவியை நாடுவதாகவும் இந்தப் பணியை தன்னால் இயன்றவரை தொடர்வேன் என்றும் உறுதிபடக் கூறுகின்றார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!