தஞ்சை மாவட்டத்தில் ஏப்.26-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் ஏப்.26-ந்தேதி உள்ளுர் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற 26.04.2018 (வியாழக்கிழமை) அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் (பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகள் மற்றும் இதர முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) உள்ளுர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது.

இந்த உள்ளுர் விடுமுறை நாளுக்கு பதிலாக வருகின்ற 12.05.2018 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும், மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது.  மேற்படி உள்ளுர் விடுமுறை நாள் செலாவணிமுறிச்சட்டம் 1881ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளுர் விடுமுறை நாளான 26.04.2018 வியாழக்கிழமை  அன்று குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!