காதிர் முகைதீன் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையின் பணி நிறைவு விழா !!!


அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ரோசம்மாள் அவர்களின் பணி நிறைவு விழா இன்று [ 29-11-2012 ] மாலை 3.00 மணியளவில் பள்ளியின் வளாகத்தில் இனிதே துவங்கியது.

நமது காதிர் முகைதீன் மேல் நிலைப்பள்ளியில் கடந்த 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உடற்கல்வி ஆசிரியையாக தனது பணியை துவக்கினார். 7 ஆண்டுகள் தலைமை ஆசிரியைப் பணியோடு மொத்தம் 31 ஆண்டுகள் ஆசிரியையாக இப்பள்ளியில் தொடர்ந்து பணியாற்றியவர். 

பள்ளியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதத்தை முறையே 97% - 99 % சாதனையைப் பெற்றுத் தந்த இவர் சக ஆசிரிய ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளியின் நிர்வாகம் ஆகியோருடனான அணுகுமுறையை இலகுவாக அமைத்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது. 









நிகழ்ச்சியின் நிரலாக...

1. கிராஅத் : தீனியாத் ஆசிரியர் நஜ்முதீன் 

2. வரவேற்புரை : ஆசிரியர் குணசேகரன்

3. வாழ்த்துரை : ஆசிரியர்கள் ஹாஜி முஹம்மது, மஹபூப் அலி, நாகராஜன், அன்பழகன், கணேஷன், ராஜா, மொய்தீன் சாகுல் ஹமீத், நஜ்முதீன் ஆகியோர்கள்

4. ஏற்புரை : தலைமை ஆசிரியை ரோசம்மாள்

5. நன்றியுரை : ஆசிரியை பர்வீன் பானு
 
 

1 comments:

ஹபீப் HB said...

அஸ்ஸலாமு அழைக்கும்.

நம் பள்ளியில் 31ஆண்டு காலமாக பணியாற்றிய ரோசம்மாள் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!