கனமழை எதிரொலி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...

 
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில், தமிழக- ஆந்திர கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால், அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 இதனால் சென்னை, உள்ளிட்ட 5 மாவட்டங்களில்  பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல இடங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றைய கன மழையால், சென்னை விமான நிலையத்தில் மழைநீர் புகுந்து பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இன்று  அதிகாலையிலிருந்து தொடர்ந்து மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!