தரகர் தெரு ஜூம்மாப் பள்ளியில் அதிரை பைத்துல்மாலின் மாதாந்திரக் கூட்டம் !


அதிரை பைத்துல்மாலின் மாதாந்திரக்கூட்டத்தில் இனி ஒவ்வொரு மஹல்லாஹ் பள்ளிவாசல்களிலும் நடத்துவது  என தீர்மானிக்கப்பட்டதை அடுத்து கடந்த [ 29-03-2013 ] அன்று மாலை 4.30 மணியளவில் முதல் கூட்டமாக நமதூர் கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளி வளாகத்தில் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து இன்று [ 26-04-2013 ] மாலை 4.30 மணியளவில் இரண்டாவதுக் கூட்டம் நமதூர் தரகர் தெரு ஜூம்ஆ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஹாஜி ஜனாப். SKM. ஹாஜா முகைதீன் அவர்களின் தலைமையில், தரகர்தெரு ஜமாத் நிர்வாகிகளின் முன்னிலையில், பைத்துல்மால் நிர்வாகிகளின் பங்களிப்போடு இனிதே துவங்கின.
Click on image to enlarge ]





நிகழ்ச்சியின் நிரல் :

1. கிரா-அத் : ஹாஜி. ஜனாப் OKM. சிஹாப்துல்லா [ பொருளாளர் ] 

2. வரவேற்புரை : ஹாஜி. ஜனாப் வழக்கறிஞர் A. அப்துல் முனாப் [ துணைத் தலைவர் ]

3. மாதாந்திர அறிக்கை வாசித்தல் : ஹாஜி. ஜனாப் S. அப்துல் ஹமீது [ செயலாளர் ]

4. தெருவில் புழங்கும் சைக்கிள் வட்டியை படிப்படியாக குறைக்கும் நோக்கில் ரூபாய் 1000/- முதல் ரூபாய் 3000/- வரையிலான வட்டியில்லா சிறுதொகை கடன் திட்டம் கடந்த கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திலிருந்து முதன் முறையாக செயல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்றைய கூட்டத்திலும் இத்திட்டம் தொடர்பாக பேசப்பட்டது. இறுதியில் தரகர் தெரு ஜமாத் நிர்வாகிகளின் பங்களிப்போடு அதிரை பைத்துல்மால் சார்பாக தரகர்தெரு மஹல்லாவில் இத்திட்டத்தை செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ரூபாய் 10,000/-ம் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

5. இன்ஷா அல்லாஹ் வரும் கல்வி ஆண்டு [ 2013-2014 ]  முதல் அதிரை பைத்துல்மாலின் “உயர்க்கல்வி திட்டத்தை” அமல்படுத்துவது தொடர்பாக கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகத்தினரிடம் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனையைக் கோரினார் அதிரை பைத்துல்மாலின் துணைத் தலைவர் ஹாஜி ஜனாப். SKM. ஹாஜா முகைதீன் அவர்கள்.

6. நன்றியுரை : ஹாஜி. ஜனாப் OKM. சிஹாப்துல்லா [ பொருளாளர் ] 

குறிப்பு : அடுத்த மாதாந்திரக்கூட்டம் நமதூர் புதுத்தெரு மஹல்லாவில் நடைபெறும் [ இன்ஷா அல்லாஹ் ! ]

நன்றி அதிரை நியூஸ்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!